உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25, 653 குற்றச்சாட்டுகளின் கீழ் 79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

கைது செய்யப்பட்டவர்களுள் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 493 பேர் பிணையில விடுதலை செய்யப்ட்டுளள்னர். 81 பேருக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள் 25, 653 குற்றச்சாட்டுகளின் கீழ் நாட்டிலுள்ள பல் வேறு மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

பொலிசாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் 29 பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.