மகாவீர் ஜெயந்தி || சென்னையில் நாளை இறைச்சி கடை திறக்கப்படுமா?

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்படுவது வழக்கம். 

இதனடிப்படையில் நாளை மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதேசமயம் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 

பெரும்பாலானோர் தமிழ் புத்தாண்டில் இறைச்சி சாப்பிடுவது வழக்கம். எனவே இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவித்ததாவது, “சென்னை மாநகராட்சியின் 4 இறைச்சி குளங்களும் இன்று மூடப்படுகிறது. ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த இறைச்சி கடை மூட, அந்தந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர மற்ற இறைச்சி கடைகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படலாம்”. என்று மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.