மாஜி முதல்வர் உறவினர் ஆம் ஆத்மியில் ஐக்கியம்| Dinamalar

மைசூரு : காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் தம்பி பேத்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் தம்பியும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான சங்கிராம் சிங் பேத்தி தர்மஸ்ரீ.மைசூரு ராஜாஜிநகரில் வசிக்கும் இவர், சட்டபடிப்பு படித்து சுய தொழில் செய்கிறார்.

நேற்று இவர், திடீரென மைசூரு பிரஸ்கிளப்பில் நடந்த எளிய நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிருத்வி ரெட்டி, தர்மஸ்ரீக்கு கட்சியின் தொப்பி அணிவித்து வரவேற்றார்.பின், அவர் கூறியதாவது:மற்ற கட்சிகள் மாநிலத்தை அபிவிருத்தி செய்யாமல், வகுப்புவாத பெயரில் அரசியல் செய்கின்றன. டில்லி போல கர்நாடகாவும் முன்னேற்றம் காண வேண்டும்.ஊழலற்ற ஆட்சி வழங்குவதாலும், மகளிருக்கு கூடுதல் முன்னுரிமை வழங்குவதாலும் ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.