காளையுடன் வந்து கலக்கலாய் வாழ்த்து சொன்ன சூர்யா… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள
சூர்யா
தனது ரசிகர்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவுவதில் முன்னோடியாக திகழ்கிறார்.

குறிப்பாக ஏழை மாணவர்களின் படிப்புக்கும் ஏழை விவசாயிகளுக்கும் சைலன்ட்டாக உதவி செய்து வருகிறார். இதனாலேயே அண்ணா அண்ணா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தனுஷை வெறுப்பேற்ற அடிக்கடி ‘அந்த’ வேலையை செய்யும் ஐஸ்வர்யா!

நடிப்பு மட்டுமின்றி விவசாயத்திலும் அதிக ஆர்வம் உள்ளவர் சூர்யா. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சூர்யா கலக்கலாக வாழ்த்து கூறியுள்ளார். கையில் காளையை பிடித்து செல்லும் சூர்யா, என் தமிழ் எனக்கூறி
தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் பனியன், ட்ராக் என அணிந்தப்படி ஏதோ ஒரு கிராமத்தில் காளையுடன் உள்ளார் சூர்யா. சூர்யாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. தற்போது சூர்யா இயக்குநர் பாலாவுடன் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறனுடன் வாடி வாசல் படத்திலும் நடிக்கிறார் சூர்யா.

Beastu ல இது தான் HIGHLIGHT; தெலுங்கு விஜய் பெண் ரசிகர்கள் உற்சாகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.