புரூக்ளின் சுரங்கத்தில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர் கைது.. பிராங்க் ஜேம்ஸ் என்ற நபர் இனவெறியால் சுட்டதாக போலீசார் தகவல்

அமெரிக்காவின் புருக்ளின் சுரங்க ரயில் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தேடப்பட்டு வந்த நபரை நியுயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிராங்க் ஜேம்ஸ் என்ற 62 வயது நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் துப்பாக்கியுடன் வந்து சுரங்க ரயில் நிலையத்தில் பிராங்க் ஜேம்ஸ் சுட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தப்பியோடிய அவரை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு தேடி வந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் வந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அடையாளம் தெரிந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார் இனவெறி காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.