தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்… வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம், டெல்டா பகுதிகள், கடலோர மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 6 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.