ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மயிலாடுதுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழகஅரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று மயிலாடுதுறை சென்ற ஆளுநரின் கார் மீது எதிர்க்கட்சிகள் கருப்புகொடியுடன் கூடிய கம்புகளை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவே, மயிலாடுதுறை விவகாரத்தில் பாஜக சத்தம் போடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஆளுநரை எதிர்த்து போராடக்கூடாது என்று எந்தவொரு சட்டமும் இல்லை என்று கூறிய அழகிரி,  தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று  அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின்போது, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உட்பட அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்துவோம் என்று கூறியவர், ஆளுநரை வைத்து தாங்கள் அரசியல் செய்யவில்லை என்றும் கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.