மதுரை எஸ்பி அலுவலகம் அருகே சாலையில் படுத்து கிடந்த கட்டிட தொழிலாளியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மர்மநபர்கள்.!

மதுரை எஸ்பி அலுவலகம் அருகே சாலையில் படுத்து கிடந்த கட்டிட தொழிலாளியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மர்மநபர்களை, சிசிடிவிக் காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை புதூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், உயிரிழந்தது மதுரை ஜவஹர்புரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்த் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு இளைஞர்கள் ஆனந்தின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது உறுதியானது. கொலை காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.