ரம்புக்கனை தாக்குதல் தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



ரம்புக்கனையில் பொலிசார் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது.

இதனையடுத்து, பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்,

இது தொடர்பில் கோட்டாபயவின் டுவிட்டர் பதிவில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது.

ரம்புக்கனையில் நடந்த சோகமான நிகழ்விற்கு வழிவகுத்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை காவல்துறை மேற்கொள்ளும்.

அனைத்து குடிமக்களும் போராட்டத்தின் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.