மீண்டும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக போகும் டிடிவி தினகரன்.!!

ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரி சுகேஷ்சந்திர சேகரிடம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் கைது செய்தி செய்யப்பட்டு, பின்னர் விடுகிக்கப்பட்டார். 

வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத், மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்தார். வழக்கறிஞர் கோபிநாத் மோகன்ராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

இதனிடையே இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் கடந்த வாரம் ஆஜரானார். 

அப்போது சுகேஷ் சந்திர சேகருடனான தொடர்பு, வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை உள்ளிட்டவை குறித்து டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில், டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.