பாலா பட ஷுட்டிங்கிலிருந்து அவசரமாக மும்பை கிளம்பிய சூர்யா: குழப்பத்தில் ரசிகர்கள்.!

‘சூரரைப் போற்று’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்
சூர்யா
நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து
வெற்றிமாறன்
இயக்கத்தில் உருவாகும் ‘
வாடிவாசல்
‘ படத்திற்கான டெஸ்ட் ஷுட்டிங்கில் கலந்து கொண்டார் சூர்யா.

இதனிடையில்
பாலா
இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.
சூர்யா 41
என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியை அடுத்து மதுரையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இது 40 நாட்கள் ஷெட்யூல். அதனை தொடர்ந்து படக்குழுவினர் கோவாவிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன்னி லியோனை தொடர்ந்து ஷிவானி நாராயணன்: ஜி.பி. முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்.!

இந்நிலையில் சூர்யா அவசரமாக பாலா பட ஷுட்டிங்கில் இருந்து அவஅவசரமாக மும்பை சென்றுள்ளார். அங்கு அந்தேரி பகுதியில் உள்ள, பாகி மற்றும் 83 படங்களின் தயாரிப்பாளர் சாஜித் நடியாத்வாலாவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்.

சூர்யா திடீரென மும்பையில் உள்ள தயாரிப்பாளர் சாஜித் நடியாத்வாலாவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு இந்தியில் ரீமேக் ஆகவுள்ள சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் பணி தொடர்பானது என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.