பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை – ஸ்டாலின் புகழாரம்

சென்னை:
பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் இன்று நடைபெற்றது வருகிறது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், அப்போது, இந்த அரசு மக்களுக்கானது, எனவே முடியுமா என்று எண்ணத் தேவையில்லை. முடியாத பலவற்றை நாம் முடித்துக் காண்பித்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எந்த நுழைவுத்தேர்வும் எந்த வகையிலும் நுழையக்கூடாது என்பதே நம்முடைய எண்ணம். ஆளுநரிடம் நாம் கேட்பது ஒப்புதல் இல்லை, சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவே கேட்கிறோம். இதில் தற்போது காலதாமதம் ஆகிறது. இதனை அரசு முறையாக எதிர்கொண்டு வெற்றிபெறும். மாணவர்களின் துயரம் விரைவில் துடைக்கப்படும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.