`ஏலியன்ஸ் கடத்திக்கிட்டு போயிடுமோனு பயமா இருக்கு!' – வீட்டுக்குள் நாள்களை கழிக்கும் 51 வயது பெண்

ஏலியன் பயத்தால் தனது வாழ்க்கையின் பெரும்பாலான நாள்களை வீட்டிற்குள்ளேயே கழித்து வருகிறார், இங்கிலாந்தை சேர்ந்த சாச்சா கிறிஸ்டி. 51 வயதான இவர், இதுவரை 9 UFO-க்கள் வானில் பறக்கும் வினோதமான நிகழ்வுகளைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். முதன் முறையாக ஏழு வயதில் இதைக் கண்டாராம். அதைத் தொடர்ந்து வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இவருக்கு நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Cloud

சிறு வயதில் இருந்து ஏற்பட்ட இந்தத் தொடர் நிகழ்வுகளால் தற்போது இவர் போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர் (PTSD) எனும் உளவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறவே அவர் பயப்படுகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றால் எப்போது வேண்டுமானாலும் கடத்தப்படலாம் என பெரும்பாலான நாள்களை வீட்டிலேயே கழித்து வருகிறார்.

`நான் என்ன பார்த்தேன் என்பதை விவரிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதே போல் நான் பார்த்ததை நம்புவதும் கடினம். வானத்தைப் பார்ப்பதே எனக்கு பயத்தைத் தருகிறது. அடுத்து என்ன சந்திக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை’ என சாச்சா தெரிவித்து உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.