தண்டவாளத்தில் கிடந்த குழந்தை மீட்பு| Dinamalar

விஜயநகரம் : ஆந்திராவில், ரயில் தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.ஆந்திராவின், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொத்தவலசை ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் காலை தண்டவாளத்தில் இருந்த பைக்குள் பச்சிளம் குழந்தை அழுது கொண்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், பைக்குள் இருந்த ஆண் குழந்தையை மீட்டு, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.குழந்தையை தண்டவாளத்தில் விட்டுச் சென்றது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.