திருமணம் பற்றி பேசிய ரம்யா பாண்டியன்..!கடைசில இப்படி சொல்லிட்டாங்களே ?

ஜோக்கர்
என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானர் ரம்யா பாண்டியன். முதல் படத்திலே தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் ரம்யா. இருப்பினும் அவர் நடத்திய ஒரு போட்டோஷூட் அவரை பட்டிதொட்டி எங்கும் இளம் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

அதன் பின் தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு இளம் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய
பிக் பாஸ்
சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மேலும் ரசிகர்களிடம் பிரபலமானார் ரம்யா பாண்டியன். பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்த ரம்யா பாண்டியனுக்கு சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இப்படம் கடந்தாண்டு OTT யில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

மீண்டும் மோதலில் விஜய் – அஜித்..! வெற்றி யாருக்கு ?

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பங்கேற்றார் ரம்யா. இந்நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் சமூகத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்க அதற்கு ரம்யா பாண்டியன், நான் முதலில் ஒருவரை கண்டுபிடிக்கவேண்டும், அவருக்கும் என்னை பிடிக்கவேண்டும், இன்னும் நான் அப்படி யாரையும் கண்டுபிடிக்கவில்லை.எனவே இப்போதைக்கு திருமணத்திற்கு வாய்ப்பில்லை என கூறினார். தற்போது ரம்யா பாண்டியன் தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட வசனத்தை மேடையில் பேசிய ஜீவா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.