தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நித்திய லட்சுமணன். இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரை அடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்ததில் மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் தலைமையாசிரியர் நித்திய லட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.