இந்தியாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,688 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நேற்று(ஏப்.,29) மேலும் 3,688 பேருக்கு கோவிட் உறுதியானது. 2,755 பேர் குணமடைந்தனர். 50 பேர் உயிரிழந்தனர். தற்போது 18,684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,33,377 ஆனது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,803 ஆனது.கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.74 சதவீதமாகவும், இறந்தவர்களின் விகிதம் 1.22 சதவீதமாகவும் உள்ளது.

latest tamil news

நேற்று மட்டும் 22,58,059 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 188.89 கோடி டோஸ் ஆகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.