காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான இளைஞன் தப்பியோட முயன்றதால் சுட்டுப்பிடித்த போலீசார்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான இளைஞன் தப்பியோட முயன்ற நிலையில், போலீசார் அவனை சுட்டுப்பிடித்தனர்.

நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 25 வயது இளம்பெண்ணை, நாகேஷ் என்பவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். நாகேஷின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அவர் மீது ஆசிட் வீசிய நாகேஷ், தமிழகத்திற்கு தப்பி வந்து திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் தனியார் ஆஷிரமத்தில் பதுங்கியிருந்தான்.

அவனை கைது செய்த போலீசார், பெங்களூரு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறி வேனில் இருந்து இறங்கிய நாகேஷ், தப்பியோட முயற்சித்திருக்கிறான்.

அப்போது, வானை நோக்கி சுட்டு எச்சரித்த போலிசாரை அவன் கல்லை வீசி தாக்க முயன்ற நிலையில், போலீசார் அவனை சுட்டுப்பிடித்தனர். தற்போது காலில் குண்டு அடிபட்டு நாகேஷ் சிகிச்சை பெற்று வருகிறான்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.