பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஹோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்தில் வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை, சில தெரு நாய்கள் துரத்தியதால் எதிர்பாராத விதமாக சணல் பையால் மூடப்பட்டிருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் சுய நினைவின்றி மீட்கப்பட்டான்.

இதனிடையே, சிறுவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதல்வர், சிறுவனின் குடும்பத்திற்கு .2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.