#BREAKING || உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு.!

உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியைக் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மதுரை கிளை உயர் நீதிமன்றம்.

உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.