வேன் -லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி… அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்வதற்காக 35 பேர் நேற்று முன்தினம் வேனில் புறப்பட்டனர்.

ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்றிரவு அங்கு தரிசனம் முடித்து ரெண்ட சிந்த்தலா சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் வந்து கொண்டு இருந்தது.

அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் லாரியின் பின்புறம் வேன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அப்பளமாக நொறுங்கிய வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்து கூச்சலிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் இடுபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 20 பேர் குண்டூர் மற்றும் நசரத்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.