குஜராத் கிராமத்தில் அடுத்தடுத்த 2 நில அதிர்வு- திகைத்து ஓடிய மக்கள்

கிர் சோம்நாத்: குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலா கிராமத்தில் அடுத்தடுத்து 2 நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினர். முதல் நில அதிர்வு தலாலா கிராமத்தில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் காலை 6.58 மணிக்கு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு 4.0 ரிக்டர் அளவில் பதிவானது. இதை தொடர்ந்து அடுத்த நில அதிர்வு 3.2 ரிக்டர் அளவில் தலாலா கிராமத்தில் இருந்து … Read more

பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்

பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள் பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இலங்கை மக்களுக்கு உதவும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்கண்ட், பீகார், அரியானா, உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கடும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் 108 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது. மீதமுள்ள 56 … Read more

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்'- ஜெயக்குமார் காட்டம்

`திமுக அமைச்சர்களிடமும் நிர்வாகிகளிடமும் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஜனநாயகவாதிகள் அல்ல, ஜமீன்தார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றுவார்கள்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி … Read more

'மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் இது' -புது கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்?

”மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என்ற பிரசாந்த் கிஷோரின் ட்விட்டர் பதிவு அரசியல் கட்சித் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் உத்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேருவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதோடு 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசித்து வந்தார். இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை … Read more

தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

திருக்கனுார் : திருக்கனுாரில் தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.தி.மு.க., சார்பில் திருக்கனுார் பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்தனர். இதற்கு, பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றம் நிலவியதால், மேற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.அதையடுத்து, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பள்ளிவாசலுக்கு வெளியே நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா, துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் … Read more

சரிவில் துவங்கிய மே மாதம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இழப்பு..!

அமெரிக்காவின் முன்னணி டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், திங்கட்கிழமை ஆசியச் சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறத் துவங்கியது. இதோடு இந்த வாரம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில், சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஐடி, வங்கி மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. பிஎஸ்ஈ ஸ்மால்கேப் இன்டெக்ஸ் … Read more

இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மாவட்ட மட்டத்தில் மீளாய்வு

நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன் முன்னேற்றம் ஆகியவை நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி மற்றும் பாலத் திட்டங்கள் மற்றும் உத்தேச திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முதன்மையான … Read more