உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?- இளைஞர் அணியினர் மிகுந்த எதிர்பார்ப்பு

சென்னை: தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதாவது பங்கேற்று வந்தார். அந்த நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அமோக இருந்தது. கட்சி … Read more

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்ந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா … Read more

ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

லண்டன்: உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது. … Read more

எஸ்.பி.வேலுமணியின் டெண்டர் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை

டெல்லி: டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை நடத்தினார்.  

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி!!

டெல்லி: எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  2021 ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயமாக்கி உள்ளன. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் … Read more

கன்னியாகுமரி: ஆம்னி பஸ்- டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

காவல்கிணறு அருகே ஆம்னி பஸ்ஸும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் இருந்து காய்கறி வாங்குவதற்காக நெல்லை மாவட்டம் காவல் கிணற்றில் உள்ள தனியார் சந்தைக்கு டெம்போவில் மூன்று பேர் சென்றுள்ளனர். இவர்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்குச் சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக டெம்போ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டெம்போவில் வந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே … Read more

இந்தியாவில் மேலும் 3,157 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 3,157 ஆக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,157 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,80,345 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,723 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,38,976 ஆனது. தற்போது 19,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 26 பேர் மரணமடைந்ததால், … Read more

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : சிக்குகிறார் 'மாஜி' எம்.எல்.ஏ.,

பெரம்பலுார் : 'டிவி' சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, 29; தனியார் 'டிவி' சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிச., 9ல் செம்பரம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, … Read more

ஸ்டெயின் ஆசையை நிறைவேற்றிய தோனி… ரசிகர்கள் ஆச்சரியம்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 46வது ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது. முதலில் விளையாடிய சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி 182 ரன்களை குவித்து சாதனை படைத்தது. சென்னை அணியின் கேப்டன் பதவி ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் தோனிக்கு கொடுக்கப்பட்ட முதல் ஆட்டத்திலே சென்னை அணி வெற்றிபெற்றது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று பிளேஆஃப் சுற்றுக்குள் சிஎஸ்கே நுழையும் என்கிற நம்பிக்கை … Read more