கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி- 31 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஷவர்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சிக்கன் ஷவர்மா வாங்கி சென்றனர். பலர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். இதில் கரிவல்லூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் தேவநந்தா (வயது 16) என்ற சிறுமியும் ஷவர்மா வாங்கி சாப்பிட்டார். இதனை சாப்பிட்ட சில மணி நேரத்தில் தேவநந்தாவுக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டது. உடனே அவரை … Read more

கணவன் கண்ணெதிரிலேயே கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம்- சிறுவன் உட்பட 3 பேர் கைது

திருப்பதி: ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ள நாகாய லங்கா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். தற்போது அவர் 4 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் தனது கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் பாபட்லா மாவட்டம் ரேப்பள்ளியில் கூலி வேலை செய்வதற்காக வந்து இருந்தார். வேலை முடிந்து சொந்த ஊருக்குச் செல்ல ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரேப்பள்ளி ரெயில்நிலையத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் தூங்கி கொண்டு இருந்தார். ரெயில் நிலையம் ஆட்கள் … Read more

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார்.  ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடஉள்ளார். மேலும், 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் … Read more

திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வு; தொழிலாளர்கள் அதிர்ச்சி..!!

திருப்பூர்: திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை உயர்ந்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பிகாரில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதார ஆய்வாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதன் பின்னர் அவர் தாயகம் திரும்பினார். பின்னர் பாஜகவில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், போன்ற கட்சிகளை வெற்றி பெற வைத்தது வரை பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உண்டு. இதனிடையே சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சிக்காக வரும் … Read more

நாமக்கல்: தாயை கட்டிப்போட்டு சிறுமி கடத்தல்; 50 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது

நாமக்கல் அருகே 50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை மீட்ட போலீசார், அதே ஊரைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்துள்ளனர். நாமக்கல் அடுத்த காளிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன்- கவுசல்யா தம்பதியினர். இவர்களது 11 வயது மகள் நேற்று அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த இருவர் அவரது தாய் மற்றும் அண்ணனை கட்டிப் போட்டு விட்டு சிறுமியை கடத்திச் சென்றனர். இதைத்தொடர்ந்து கடத்தல்காரர்கள் 50 … Read more

பாலியல் புகார் – மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் விஜய் பாபு விலகல்

பாலியல் புகாரை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் நடிகர் விஜய் பாபு. பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவின் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக  விஜய் பாபுவால்  தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார். இதற்கிடையே, … Read more

கர்நாடகாவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. இஸ்ரேல் நிறுவனம் ரூ.22900 கோடி முதலீடு.. எதற்காக தெரியுமா..?!

இந்தியாவின் அடுத்த பெரிய திட்டம், இலக்கு எனப் போற்றப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காகக் கடந்த 3 மாதமாக இத்துறையில் முன்னோடியாக இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனத்திடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் வெளிநாட்டு நிறுவனம் கர்நாடகாவில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா-வை மாற்றப்போகும் 2 … Read more

மேல் மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் ,சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் அடிக்கடி  மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் ஊவா மாகாணத்திலும் , மட்டக்களப்பு மற்றும் … Read more

நாமக்கல்: ரூ50 லட்சத்துக்காக கடத்தப்பட்ட சிறுமி மீட்பு… சிக்கிய உறவுக்கார தம்பதி

நாமக்கல் மாவட்டம் எருமை பட்டி அருகே காளி செட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன். இவர் லாரி டிரைவாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கெளசல்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் கடந்த ஆறு வருடமாக முருகேசன் என்பவரின் மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டு மொட்டை மாடியில் கௌசல்யா தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2 … Read more