மாயமான ரூ.20 லட்சம் பணம்.. இளைஞரை ஆள்வைத்து கடத்திய பெரியப்பா.. 4 பேர் கைது..!

சென்னை பெரவள்ளூர் அருகே, வீட்டில் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் பணம் காணமல் போனது தொடர்பாக இளைஞர் ஒருவரை அவரது பெரியப்பாவே ஆள் வைத்து கடத்த முயன்ற விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 வயதான பிரசாந்த், தனது பெரியம்மா பானுமதி, பெரியப்பா சிவக்குமாருடன் பெரவள்ளூரில் அவர்களது வீட்டில் தங்கியிருந்தார். பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் சிவக்குமார், கார் விற்பனை மூலம் பெற்ற பணம் 50 லட்சம் ரூபாயை மனைவியிடம் கொடுத்திருக்கிறார்.

அதில் 20 லட்சம் காணாமல் போனதால் பிரசாந்த் மீது சந்தேகப்பட்ட சிவக்குமார் அவரிடம் விசாரித்தில், தான் எடுக்கவில்லை என பிரசாந்த் மறுத்துள்ளார். அதனை நம்பாத சிவக்குமார், அவரை கடத்த திட்டமிட்டு ஆட்களை அனுப்பியிருக்கிறார்.

அதன் படி, கடந்த வியாழக்கிழமை பிரசாந்த் வீட்டில் இருந்து வெளியே வந்த போது 2 பைக்கில் காத்திருந்த மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கிற்கு வழிகாட்டும் படி கூறி அவரை பைக்கில் ஏற்றி, கத்திமுனையில் கடத்திச் சென்றனர்.

அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே போலீசாரைக் கண்டதும் பைக்கில் இருந்து கீழே எகிறி குதித்து தப்பிய பிரசாந்த் கத்திக் கூச்சலிட்டதால், போலீசார் பிரசாந்தை கடத்த முயன்ற 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் பிரசாந்தின் பெரியப்பா சிவக்குமார் கடத்தச் சொன்னதாக அவர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.