ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மாற்றமா?: ரிசர்வ் வங்கி விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றப்படாது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை பயன்படுத்த உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இதற்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது.

latest tamil news

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛தற்போதைய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை. காந்தியின் படம் மாற்றப்படாது. அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை’ என விளக்கமளித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.