அடிப்படை வசதிகள் வழங்க வழியின்றி தவிக்கும் ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை தகவல்!


உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் போதுமான பொதுசேவைகளை வழங்க ரஷ்யா திணறி வருவதாக பிரித்தானிய உளவுத் துறை அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.

நான்காவது மாதமாக தொடரும் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும் செவெரோடோனெட்ஸ்கைச் சுற்றி உக்ரைனிய படைகளுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையே சண்டை தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் உக்ரைனிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ரஷ்யா திணறி வருவதாகவும், பாதுகாப்பான குடிநீர், தொலைபேசி சேவை மற்றும் இணையதள சேவைகள் ஆகியவற்றை வழங்குவதில் பெரும் இடையூறு தொடர்வதாகவும் பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் கெர்சனில் மருந்துகளுக்கான கடுமையான தட்டுப்பாடு இருக்கலாம் எனவும், மரியுபோல் நகரில் மிகப்பெரிய காலரா தொற்று வெடிப்பு ஆபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், மே மாத தொடகத்தில் முதல் காலரா தொற்று தனிமைப்படுத்துதல் வழக்கு பதிவாகி இருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அடிப்படை வசதிகள் வழங்க வழியின்றி தவிக்கும் ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை தகவல்!

கூடுதல் செய்திகளுக்கு: போரை தொடங்க சீனா தயங்காது: தைவானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பெய்ஜிங்!

அத்துடன் மரியுபோலில் மருந்து சேவைகள் ஏற்கனவே சரிவை நெருங்கிவிட்டன, இந்த நிலைமை மரியுபோலில் மிகப்பெரிய காலரா வெடிப்பை மோசமாக்கும் என எச்சரிக்கையும் பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.  

அடிப்படை வசதிகள் வழங்க வழியின்றி தவிக்கும் ரஷ்யா: பிரித்தானிய உளவுத் துறை தகவல்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.