கூட்டுறவு வங்கிகளில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி.. திமுக MP எச்சரிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுக பிரமுகர் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாமக்கலில் பேட்டியளித்த அவர், ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான மணி என்பவர், தனது சகோதரர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் சுப்ரமணி என்பவர் பெயரில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கி ஒரு லட்சத்து 50 ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் பெற்று மோசடி செய்ததாக ராஜேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.