ஒடிசாவில் ஆற்றில் கவிழ்ந்த லாரி வெடித்து சிதறி கோர விபத்து: காப்பாற்ற சென்றவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

புபனேஸ்வர்: ஒடிசாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து வெடித்து சிதறியதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் Paradwip பகுதியில் இருந்து நள்ளிரவு 2 மணி அளவில் பெட்ரோல், டீசல் ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் மேகார் பகுதியை நோக்கி சென்றன. இடாமதி என்ற பகுதியில் குசுமி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் மீது சென்று கொண்டிருந்த போது முதலில் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. மற்றோரு லாரியில் இருந்தவர்கள் அவர்களை மீட்க சென்றனர். அப்போது ஆற்றில் கவிழ்ந்த லாரி வெடித்து சிதறியது. இதில் காப்பாற்ற சென்றவர்களோடு சேர்த்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.