ஜனாதிபதி இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து

அவுஸ்திரேலிய அணியுடனான 3 ஆவது ரி-20 போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ரியூட்டல் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இந்த வெற்றி ஒரு சிறந்த வெற்றியாகும். அணித் தலைவர் கசுன் சானக்க உள்ளிட்ட அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டி கடந்த 11 ஆம் திகதி கண்டி பள்ளேகல விளைளயாட்டு மைதானத்தில் நடைபெற்றது இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை அவுஸ்ரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டுள்ளமை குறிபிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.