எதிர்வரும் 29 ஆம் திகதி ,அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் தொழில் சந்தை

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் உருவாகியுள்ள வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் ,ஜூன் மாதம் 29 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொழில் சந்தை நடைபெறவுள்ளது.

பதவி வெற்றிடங்கள் உள்ள பல உள்ளூர் தனியார் நிறுவனங்கள் இந்த தொழில் சந்தையில் பங்கேற்கவுள்ளன. அன்றைய தினம் சமூகமளிக்கும் பயனாளர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாகவும் அமையக்கூடும்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன்போது நடைபெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் என்பனவும் இதன்போது இடம்பெறவுள்ளன.

இதேவேளை தொழிற்கல்வியை நடத்தும் பல அரச நிறுவனங்களும் இதன்போது பங்கேற்கவுள்ளன.

அனுராதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு நிலையம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் மனிதவள உத்தியோகத்தர்களினால் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டு வழிநடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.