கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து புது ஆபத்தா; அலறவைக்கும் அறிகுறிகள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய நோயின் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. அதன்படி பிரிட்டனில் ஒரு புதிய நோய் கண்டறியப்பட்டுள்ளது, அதில் போலியோவின் அறிகுறிகள் மாதிரியில் கண்டறியப்பட்டுள்ளன. பிரிட்டனின் வரலாற்றில் 40 வருடங்களில் முதன்முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த நோய் சரியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், கொரோனாவை போன்று உலகின் பிற பகுதிகளுக்கும் பரவும் என நம்பப்படுகிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலியோவின் அறிகுறிகள் தென்பட்டது
கூட்டாளர் இணையதளம் டிஎன்ஏ படி, கடந்த 6 மாதங்களில் காலரா, தட்டம்மை மற்றும் குரங்கு அம்மை போன்ற நோய்கள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் போலியோ அறிகுறிகள் காணப்பட்டன. அந்த மாதிரிகளை பரிசோதித்தபோது, ​​இது உண்மை என நிரூபிக்கப்பட்டது. அதன்படி பிரிட்டனில் போலியோ நோய் 40 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. தற்போது மீண்டும் இந்த நோய்க்கான அறிகுறிகள் தீவிர எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி பற்றிய முழு விவரங்கள் இதோ 

மருத்துவர்கள் டிசீஸ் எக்ஸ் என்று பெயரிட்டனர்
அறிக்கையின்படி, மருத்துவர்கள் இந்த அறியப்படாத நோய்க்கு டிசீஸ் எக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் போன்று இதுவும் ஒரு தொற்று நோயாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த நோய்க்கான காரணம் என்ன, அது எவ்வாறு பரவுகிறது? இது குறித்து இதுவரை டாக்டர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நோயை ஆய்வு செய்து அதன் மருந்து கண்டுபிடிக்கப்படாத வரை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் நோயைத் தடுக்க ஒரே வழி இதுதான் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் மக்களுக்கு சிரமம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவி வரும் கொரோனா தொற்று லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. இந்த தொற்றுநோயால், மக்களின் பொருளாதாரம் ஸ்தம்பித்து, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ முயற்சிகள் இருந்தும், கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்போது புதிய நோயின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுநடுங்கிப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் 55.05 கோடி பேருக்கு கொரோனா
உலகளவில் 50.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6.72 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் 1,214 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Monkeypox Alert: தொண்டை மற்றும் ரத்தத்தில் 10 வாரங்கள் வரை நீடிக்கும்: அசாதாரண அறிகுறிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.