VIVO: போலி ஆவணத்தில் வந்த சீனர்கள்.. விவோ நிறுவனத்தில் உயர் பதவி..!

விவோ நிறுவனத்தின் பண மோசடி இந்தியாவையே உலுக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், அதை விட முக்கியமாக இந்தியாவில் சீனர்கள் இருவருக்குப் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விவோ நிறுவனத்தில் உயர் பதவி கொடுத்துள்ளது பேரதிர்ச்சியாக உள்ளது.

22 மாநிலங்களில் விவோ நிறுவனம் மற்றும் அதன் 23 கூட்டணி நிறுவனங்கள், அலுவலகங்கள் என மொத்தம் 44 இடங்களில் அமலாக்க துறை சோதனை செய்துள்ளது.

இந்தத் சோதனையில் ரொக்க பணம், டெப்பாசிட், தங்கம் உட்படப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்க துறை வட்டாரங்கள் கூறுகிறது.

ரூ.62,476 கோடி அபேஸ்.. அலேக்கா சீனா-வுக்கு டிரான்ஸ்பர் செய்த #Vivo.. வரி ஏய்ப்பு மோசடி..!

விவோ

விவோ

விவோ மற்றும் அதன் 23 கூட்டணி நிறுவனங்கள், அலுவலகங்கள், வளாகங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனையின் போது Vivo உடன் தொடர்புடைய நிறுவனங்களில் ஒன்றின் இயக்குநர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

சீன இயக்குநர்கள்

சீன இயக்குநர்கள்

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில், விவோவுடன் தொடர்புடைய ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சோலன் என்னும் நிறுவனத்தின் சீன இயக்குநர்கள் இருவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள்

சோலன் என்னும் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரும் சீன நாட்டவர்கள், போலி ஆவணங்கள் மூலம் இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் எனப் பிஸ்னஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.65,000 கோடி பணமோசடி நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

62,476 கோடி ரூபாய் மோசடி
 

62,476 கோடி ரூபாய் மோசடி

விவோ இந்திய பிரிவு அதன் மொத்த Turnover-ல் கிட்டத்தட்ட 50 சதவீத பணம் அதாவது 62,476 கோடி ரூபாயை, இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிட்டு சீனா-வுக்கு அனுப்பியுள்ளது என அமலாக்கத் துறை வியாழக்கிழமை (இன்று) கூறியுள்ளது.

சோதனை பறிமுதல்

சோதனை பறிமுதல்

விவோ நிறுவனத்திற்குச் சொந்தமான 44 இடங்களில் செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 119 வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சியோமி

சியோமி

சியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 5,551.27 கோடி ரூபாய் தொகையை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ், அந்நிறுவனம் செய்த சட்டவிரோத வெளிப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் இருந்து ஏப்ரல் மாதம் அமலாக்க துறை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

VIVO மோசடி: இந்தியாவை விட்டு தப்பி ஓடிய ராஜதந்திரி பின் லுவோ..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vivo 2 Chinese directors fled india; Chinese nationals with fake documents

Vivo 2 Chinese directors fled india; Chinese nationals with fake documents VIVO: போலி ஆவணத்தில் வந்த சீனர்கள்.. விவோ நிறுவனத்தில் உயர் பதவி..!

Story first published: Thursday, July 7, 2022, 20:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.