இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
குலு மாவட்டம் பகிபுல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கங்ரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட வெளிமாநில 6 பேர் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மலைக் கிராம போக்குவரத்து முடங்கிய நிலையில் மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.