கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்…!ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் – ஜோ பைடன்

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்,ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றபிறகு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் தொற்று மாறுபாடுகளுக்கு எதிராக மிகவும் திறம்பட பாதுகாக்கக்கூடிய புதிய தடுப்பூசிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்க இன்று ஒரு உச்சிமாநாட்டை நடத்த வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.