சசிகலா இன்னும் அதிமுகவில்தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தகவல்…

சென்னை: அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கவில்லை; அவர் இன்னும் அதிமுகவில் தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தெரிவித்தார். 28ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது பற்றி ஓபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என அவர் கூறினார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதுடன், ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட உள்ளார். இதையடுத்து இருவரும் இடையே மோதல் போக்கு நீடித்து வரஐகிறது.  இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகலா இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு கோவை செல்வராஜ்  தெரிவித்துள்ளார்.  சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் அதிமுகவில் தான் இருக்கிறார்.  28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை  சந்திப்பது பற்றி ஓபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என கூறியவர்,  புதிய நிர்வாகிகள் நியமனம் ஒன்றன் பின் ஒன்றாக, தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், நிர்வாகிகள் நியமனம் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்படும்; பொருளாளர் என்ற முறையில் ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார் என்றும் கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.