ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க அவர்கள் தமது கடமைகளை ஆரம்பித்தார்…

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்ட சாகல ரத்நாயக்க அவர்கள், இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட, ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

28.07.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.