இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). இவர் பண்ருட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வளைவில் திரும்பியபோது ஒரகடம் நோக்கி அஸ்வின் குமார்(25) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விக்னேஸ்வரன் சம்பவ … Read more

கன்னியாகுமரி – சென்னை உட்பட 23 ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: கன்னியாகுமரி – சென்னை விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 23 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படும் விரைவு ரயில்(12695) மறுநாள் காலை 7.50 மணிக்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாக காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். … Read more

ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் – சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்

புதுடெல்லி: மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.5,200 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், மின் துறையின் செயல்பாடுகளையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும் நோக்கில் ‘புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்ட’த்தை அவர் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின் கீழ், மின் துறையை நவீனப்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 2025-26 நிதி ஆண்டு வரை ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகான … Read more

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம்.

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம். கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம். மூலவர் :கண்ணீஸ்வரமுடையார். அன்னை: அறம்வளர்த்த நாயகி/கௌமாரியம்மன் தீர்த்தம்: முல்லையாறு. தலசிறப்பு :: மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களை தீர்க்கும் மூலிகை சக்தி கொண்ட முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஆலயம். கண் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் சக்தியுள்ள தலம். பாண்டிய நாட்டை ஆண்டுவந்த வீரபாண்டிய மன்னனுக்கு முன்வினைப்பயனால் இடையில் பார்வை பறிபோனது. பார்வையோடு இருந்த அவனுக்கு இடையில் பார்வை … Read more

ஜூலை 31: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டெல்லியில் இனிமேல் ஒன்லி கவர்மென்ட் சரக்கு

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. முதல்வர் கெஜ்ரிவால் அமல்படுத்திய புதிய கலால் கொள்கை சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விதிகளை மீறி உருவாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கு அரசு பணம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், புதிய கலால் கொள்கைக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்க மறுத்த கவர்னர், முறைக்கேடுகள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில், புதிய கலால் கொள்கை வாபஸ் பெறப்படுவதாக … Read more

வீடீயோ கான்பரன்ஸ் மூலம் திருமணம்.. அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம்.! 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான வம்சி சுதர்ஷனி என்ற இளம் பெண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்திய வம்சாவளியான என்பவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்றும், தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம்.  அதன்படி கடந்த மே 5ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள ஆன்லைனில் விண்ணப் பித்து, பின்னர் சம்பந்த பட்ட திருமண பதிவு அதிகாரி முன்பு இருவரும் … Read more

22 கோடி பேருக்கு வேலை இல்லை என்பதா? – யெச்சூரிக்கு பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம்

சென்னை: நாடு முழுவதும் 22.05 கோடி பேருக்கு வேலையே இல்லை என்பது போன்ற மாயையை சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் உருவாக்க நினைப்பது மோசடி வேலை என்று தமிழக பாஜக துணைத் தலைவர் தி.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், பணி கிடைத்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. இதை சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘கடந்த 7 ஆண்டுகளில் வேலைக்காக விண்ணப்பித்தோர் … Read more

நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையை தூண்டுகின்றனர் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டில் மதத்தின் பெயரால் சிலர் பிரிவினையைத் தூண்டுகின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நேற்று சர்வமத தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உட்பட பல்வேறு மதங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்டிவருகின்றனர். மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை தூண்டும் நபர்கள், … Read more

வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதி 11 பேர் உயிரிழப்பு

சிட்டகாங்: வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டம் மிர்ஷாராய் உபாசிலா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை மினி பஸ் ஒன்று ஏற்றிச் சென்றது. இந்தபஸ், டாக்கா நோக்கிச் செல்லும்போது வழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியே வந்த பிரோவதி விரைவு ரயில், பஸ் ஆகியவை மோதிக்கொண்டன. இதில் 7 மாணவர்கள், 4 ஆசிரியர் உட்பட 11 பேர் … Read more