இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 51 பேர் பலி!

பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் உட்பட 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவுக்கும் இடையே பல ஆண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் காசா நகரில் உள்ள பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல் ஜபாரி உட்பட இதுவரை 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கியூபாவில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு ..! – மின்னல் தான் காரணமாம்..!

காசா பகுதியில் நடந்த தாக்குதலில், இதுவரை 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் காசா இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத பிரிவை சார்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.

இதில் தொடர்பில்லாதவர்கள் 11 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. மொத்தம் குழந்தைகள் உட்பட காசா பகுதி பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.