பெங்.,ல் அமெரிக்க துாதரகம்:அமைச்சர் ஜெய்சங்கர் பதில்| Dinamalar

பெங்களூரு : ”பெங்களூரில் அமெரிக்க துாதரகம் அமைப்பது குறித்து, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,” என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் பெங்களூரு வந்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், கூறியதாவது:பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வர்த்தக சமுதாயத்தினருடன் நடந்த உரையாடலின் போது, நகரில் அமெரிக்க துாதரகம் அமைப்பது குறித்து யோசனை கூறப்பட்டது.

இதற்கு அந்நாட்டினர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதால், இது குறித்து கேட்பேன். 2006 ல் பெங்களூருவும், ஹைதராபாத் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில், ஹைதராபாத்தில் அமெரிக்க துாதரகம் அமைத்துள்ளனர். ஒரு துாதரகத்தை ஒரே இரவில் ஸ்தாபிக்க முடியாது. ஏனெனில் அதற்கு நிதியும், ஆட்களும் தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.