முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டிக் கொலை.. 12பேர் கொண்ட கும்பலுக்கு வலை.!

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளரை வெட்டிக் கொலை செய்த 12பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொத்த தெருவைச் சேர்ந்த கண்ணன் மற்றும் கதிரவன் இடையே கடந்த ஆண்டு ஓட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கதிரவனை தாக்கியது தொடர்பாக கைதான கண்ணன் பின்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 15நாட்களுக்கு முன்பு வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது 12பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதில் கண்ணன் உயிரிழந்தார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.