வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்ட் டெம்போவில் கடத்தல் – 3 பேர் கைது..!

திட்டக்குடி அருகே, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், பட்டப்பகலில் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டை டெம்போவில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்களுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வரும் கிருஷ்ணன் என்பவருக்கும் குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணன், குமாருக்கு கொடுக்க வேண்டிய பல லட்சம் ரூபாயை தராமல் அலைக்கழித்து வந்ததாகவும் பலமுறை கேட்டும் பணத்தை தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது நண்பர் ஆனந்துடன் சேர்ந்து, திட்டக்குடியில் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனை டெம்போவில் கடத்திச் சென்றுள்ளார்.

கிருஷ்ணனின் மகன் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சி உதவியுடன், குமாரின் சம்பந்தி செல்வராஜ் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.