சென்னையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் – எதற்காக தெரியுமா?

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.  இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.  பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஷாருக்கானை வைத்து படம் ஆரம்பித்தார் அட்லீ. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் இருந்து வந்தது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு கடந்த ஜூன் 3ஆம் தேதிவெளியானது. 

முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றி இருப்பது போல் ஷாருக்கான் தோற்றமளித்தார், இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக லயன் என்று வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

 

இச்சூழலில் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ஜவான் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது. இதற்காக ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு நடிகர் ஷாருக்கான் சென்னை வந்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.