தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,380 கோடி மானியம் – மத்திய அரசு வழங்கியது

புதுடெல்லி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வழங்கல் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில் முதல் தவணையாக கர்நாடகம், உத்தரபிரதேசம், திரிபுரா, ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.4189.58 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு ரூ.1,380.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்தம் ரூ.15 ஆயிரத்து 705.65 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு … Read more

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, லக்‌ஷயா தோல்வி

ஒசாகா, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அண்மையில் உலக போட்டியில் மகுடம் சூடிய அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யமாகுச்சி 21-9, 21-17 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் சாய்னாவை பந்தாடினார். யமாகுச்சிக்கு எதிராக 13-வது முறையாக மோதிய சாய்னா அதில் சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் … Read more

சீனாவில் புதிதாக 1,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,829 பேருக்கு … Read more

சென்னை-செங்கோட்டை ரயில் என்ஜீன் மதுரை நிலையத்தில் தடம் புரண்டது

மதுரை ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் இன்று (ஆகஸ்ட் 31) காலை திடீரென புரண்டது. இதனால் சிறிது நேரம் ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது. சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் என்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதுபோல இன்று அதிகாலை என்ஜின் மாற்றம் நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.  இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார … Read more

செங்கல்பட்டு || முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட காவலர்.. தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு..!

காவலரை கொலை செய்த உறவினர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     செங்கல்பட்டு மாவட்டம், வடக்கு செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ்குமார். இவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை அவர் தனது நிலத்தை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவருக்கு அழைப்பு வந்ததால் சாலையோரம் வண்டியை நிறுத்தி பேசி கொண்டிருந்தார். அப்போதுஎதிர் திசையில் காரில் வந்த காமேஷ்குமாரின் அக்காள் கணவரான மதன்பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சாலையோரம் … Read more

மறைந்த எழுத்தாளரின் உடல், கண்கள் தானம்

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(82). இவரது மனைவி அமர்ஜோதி கடந்த ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு திலீபன்(53), கோபிநாத்(52, கவுதமன்(47) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ஓய்வுபெற்ற ஆசிரியரான சுந்தர மகாலிங்கம் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் தொடர்கள் மற்றும் புத்தகங்களை எழுதி உள்ளார். தான் இறந்தபிறகு தனது கண்கள் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என உயில் எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது … Read more

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1 பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை … Read more

கருப்பு உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக நம்மில் பலருக்கு உதடுகள் கருமையாக காட்சியளிப்பதுண்டு. உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அவை சூரிய ஓளி நேரடியாக முகத்தில் படுவது, பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, உதட்டுச்சாயத்தை அழிக்க மறப்பது, புகை பிடிப்பது, புகையிலை பழக்கம் போன்றவை. உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே உதட்டின் நிறத்தை பராமரிக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.  … Read more

இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலையில் பள்ளம் தோண்டி பணியை நிறுத்திய விவசாயி: விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம்பேட்டை அருகே  சமத்துவபுரத்திலிருந்து தொடங்கி சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மங்கலம்பேட்டையை சேர்ந்த விவசாயி முகமது அலி(63) என்பவரிடம் சுமார் 50 சென்ட் நிலத்தை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தினர். பலருக்கு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கவில்லை. … Read more

எம்டி படிப்புக்கு 19ல் கவுன்சலிங்

புதுடெல்லி:  முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான (எம்டி) நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) வழக்கமாக ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச்சில்  கவுன்சலிங் தொடங்கும். ஆனால், கொரோனா தொற்று மற்றும் கடந்தாண்டு சேர்க்கை செயல் முறை தாமதம் காரணமாக, இந்தாண்டு தேர்வு கடந்த மே 21ம் தேதிதான் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் … Read more