அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…

டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக  ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார்.  அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா,   நாட்டுக்காகவும், உத்தர பிரதேச மாநிலத்துக்காகவும் விளையாடியது, தனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதை.  தனக்கு ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜீவ் சுக்லாவுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்கள் ஆகியோருக்கும் நன்றி என தெரிவித்து உள்ளார்.

சுரேஷ் ரெய்னா ஏற்கனவே, ஆகஸ்ட் 15, 2020 அன்று சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற்றார். அந்த நாளில் இருந்து சுமார் 2 ஆண்டுகள், இடது கை பேட்டர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கும் விடைபெற்றார். வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடும் நோக்கத்தில், இந்திய கிரிக்கெட்டிலிருந்து பிரிந்து செல்ல ரெய்னா முடிவு செய்தார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவரான ரெய்னா கடைசியாக 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 லீக்கில் விளையாடினார். 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டியின் 2020 பதிப்பில் இருந்து அவரே வெளியேறினார் மற்றும் 2021 ஆம் ஆண்டின் குறைவான பருவத்தைத் தொடர்ந்து சிஎஸ்கே உரிமையாளரால் வெளியேற்றப்பட்ட நிலையில், 2022 மெகா ஏலத்தில் அவரை ஒரு அணியினரும் எடுக்காமல் புறக்கணித்தனர். இந்த நிலையில், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பிலும் ரெய்னா விளையாடி யுள்ளார். சிஎஸ்கே ரசிகர்களால் சின்னதல என்று அன்போடு அழைக்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா. அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மரியாதை செலுத்துவதாக டிவிட் பதிவிட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா, இந்தியாவுக்கு வெளியே டி20 லீக் போட்டிகளில் விளையாட ரெய்னா திட்டமிட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள லீக்குகளில் அவர் விளையாடுவார் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.