ஃபுளூ காய்ச்சல்… பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் அட்வைஸ்!

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 இன்று சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 36 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 35 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

இதுவரை (18-09-2022) 12-14 வயதுடைய 19,86,409 (93.65%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 15,66,176 (73.84%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15-17 வயதுடைய 30,53,610 (91.26%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 25,95,960 (77.58%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி தரப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக மொத்தம் 86,06,640 (20.20%) பயனாளிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று (18-09-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 8,17,276 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 28,285 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,83,073 பயனாளிகளுக்கும் மற்றும் 6,05,918 பயனாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.54% முதல் தவணையாகவும் 91.37% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

உஸ்மான் ரோடு, தி.நகர் பேருந்து நிலையம் அருகில், அமைக்கப்பட்ட சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். வரும் 25-09-2022 அன்று 38வது சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 292 அரசு மருத்துவமனைகள் மற்றும் 42 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய 11,333 மையங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் (13 ஆன்டிஜென்) பிரதி வாரம் புதன்கிழமை தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் அறிவிப்புபடி 18-59 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை இலவசமாக வழங்குவது செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதால், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கூறிய 11,333 மையங்களில் பிரதி வாரம் புதன்கிழமைதோறும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுடன் இணைந்து கோவிட் தடுப்பூசி தவணைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மலும், 12-17 வயதுடைய மாணவர்களில் இரண்டாம் தவணை பெற வேண்டியவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பிரதி வாரம் வியாழக்கிழமை அன்று சிறப்பு முகாமினை அமைத்து கோவிட் தடுப்பூசி தவணைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சு. தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1,044 நபர்களுக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டதில், தற்போது 364 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்துமம்படியும் அமைச்சர் அறிவுரை வழங்கினார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டிய Åழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் கூறினார்.

மாநிலத்தில் இன்று (18.09.2022) நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை முன்னிட்டு நாளை (19.09.2022) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.