யார் பிளவு சக்தி? – ராகுல் பயணத்தை விமர்சித்த அண்ணாமலைக்கு ப.சிதம்பரம் பதிலடி

திண்டுக்கல்: “அன்று வெள்ளையனே வெளியேறு என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. இன்று இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதிலும் ஆர்வம் கிடையாது. யார் பிளவு சக்தி என்று இதிலிருந்து தெரிகிறது” என்று ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி தந்துள்ளார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் … Read more

தீவிரவாத மிரட்டல் எதிரொலி: ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அலுவலகத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பு. சர்வதேச அளவில் இயங்கும் இதன் கிளை டெல்லியின் ஜண்டேவாலன் பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பல முறை தீவிரவாத அமைப்புகள் மற்றும் மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதை உறுதி செய்த மத்திய உளவுத்துறை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மேலும் சில அலுவலகங்களுக்கும் இதுபோன்ற … Read more

‘வெள்ளையனே வெளியேறு’ என்று சொன்னது போல், பாஜக-வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்..! – ப.சிதம்பரம் பேச்சு..!

தேச ஒற்றுமை யாத்திரை பொது கூட்டத்தில் பாஜக வை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேசியுள்ளார். இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் … Read more

காங்கிரஸ் மூழ்கிய கப்பல்: ராகுலின் பாதயாத்திரை கட்சியை காப்பாற்றாது: வானதி சீனிவாசன்

கோவை: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் சரி எந்த பயனையும் தராது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும்  ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்த … Read more

இந்திய ஒற்றுமை பயணம் திருப்புமுனையாக அமையும்… காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் : சோனியா காந்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணம் நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த யாத்திரை இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருக்கும் சோனியா காந்தி, இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தருணத்தில் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மதவாதம் மற்றும் … Read more

வாழப்பாடி அருகே 3 ஆயிரம் தீப்பந்தங்களுடன் ஸ்ரீஅத்தனூர் அம்மன் சக்தி அழைத்தல்: எருமை கிடா பலியிட்டு வழிபாடு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கபுரத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீமகாமாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பின் தேர்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. தேரோட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக ரூ.1.25 கோடியில் 2 தேர்கள் செய்யும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. நேற்றிரவு ஸ்ரீஅத்தனூர் அம்மன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பந்தங்கள் … Read more

இந்தியாவை பிளவுபடுத்தும் பாஜக: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

கன்னியாகுமரி: இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்காக காங்கிரஸ் கட்சி ஒற்றுமை யாத்திரையை நடத்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரசின் ஒற்றுமை யாத்திரையில் பங்கு பெறும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா இன்று பெரிய அளவில் பிளவுப்பட்டுள்ளது; மக்கள் எதிரும் புதிருமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.

உத்தவ் தாக்கரேவுடன் மோதல் விவகாரம்; எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் மூக்கை அறுப்போம்: நடிகையான எம்பிக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை: எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் அவர்களின் மூக்கை அறுப்போம் என்று, நடிகையும், சுயேட்சை எம்பியுமான நவநீத் ராணாவை சிவசேனா செய்தி தொடர்பாளர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரை கடுமையாக விமர்சித்த நடிகையும், சுயேட்சை எம்பியுமான நவநீத் ராணா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் நவநீத் ராணா இருக்கும் நிலையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவர் சிவசேனா கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதுகுறித்து … Read more

வேலூர் டூ சென்னை… ஆம்புலன்ஸில் பறந்த மூளைச்சாவு அடைந்த சிறுவனின் இதயம்

உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றொருவருக்கு பொறுத்த வேண்டும் என்பதால் 1 மணி 30 நிமிடங்களுக்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நிஜந்தன் செய்ய உள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன் புதூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் கோவிந்தராஜ் – அர்ச்சனா தம்பதியினரின் மூத்த மகன் சுதீஷ் (11 வயது). கடந்த 4ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள … Read more

”ஸ்பிரே அடிச்சுப் போட்ருவேன்”.. குண்டு போட்டு ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல்!

ஏ.டி.எம் மையங்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் குறித்து அன்றாடம் கேள்விப் பட்டிருப்போம். திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் போலீஸ் வசம் சிக்காமல் இருக்க பல்வேறு வழிகளை கையாள்வார்கள். அந்த வகையில் மகாராஷ்டிராவில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்று அம்பலமாகியிருக்கிறது. அதன்படி, சதாரா மாவட்டத்தின் நாக்தானே கிராமத்தில் உள்ள ஏ.டி.எமில் உள்ள பணத்தை கொள்ளை அடிப்பதற்காக வெடிகுண்டு வைத்து தகர்த்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் போலீசிடம் சிக்கிவிடக் கூடாதென சிசிடிவி … Read more