மேற்கு நாடுகள் தோல்வியடைகிறது…எரிவாயு விற்பனையில் சீனாவிற்கு புதிய சலுகை: புடின் அறிவிப்பு!

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதாக புடின் பேச்சு. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை அழித்து வருவதால் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது அதிகாரப்பூர்வ போர் தாக்குதலை தொடங்கியது. 🇷🇺 President Vladimir Putin claims … Read more

பேராலய ஆண்டு பெருவிழா; வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: நாகையில் நாளை உள்ளூர் விடுமுறை

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்றிரவு தேர் பவனி நடக்கிறது. இதில் பங்கேற்க ஆலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப்புகழ் பெற்றது. இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த … Read more

கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் ராகுல் காந்தி

குமரி: கன்னியாகுமரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி வரவேற்றார். முதல்வரும், ராகுல் காந்தியும் இணைந்து காந்தி மண்டபத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.   

ரயில்வே நிலத்தை நீண்டகால குத்தகைக்கு விட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுவரை ரயில்வே நிலங்கள் 5ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் நீண்டகாலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.  

”என்ன மன்னிச்சிடுங்க”.. பேருந்தில் விட்டுச் சென்ற தன் குழந்தைக்காக மனம்திருந்தி வந்த பெண்!

தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண், மனம் திருந்தி குழந்தையை தேடி வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து, காவல் துறையினர் அவரை எச்சரித்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. பின்னர் பேருந்து … Read more

சைரஸ் மிஸ்ட்ரி மரணம் எதிரொலி: கார் தயாரிப்பில் அமலாக உள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன?

பின் இருக்கையில் அமர்பவர்களும் சீல் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் வகையில் எச்சரிக்கை சமிக்ஞை வழங்கும் வகையில் வடிவமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னிருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் எச்சரிக்கை சமிக்ஞை கொடுக்கப்படுவது போல பின்னிருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவதை உறுதிப்படுத்த இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் இயக்குனர் சைரஸ் மிஸ்ட்ரி பின் இருக்கையில் சீட் … Read more

நல்லா படிக்கிறானா? மகளுக்காக மாணவனை கொன்ற தாய்..கதிகலங்கிய காரைக்கால்! வீட்டை சூறையாடிய மர்மகும்பல்!

Tamilnadu oi-Rajkumar R காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியாவின் வீட்டை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு நிலவுகிறது. புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள … Read more

சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுப்பு| Dinamalar

மும்பை: பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்திக்க அக்கட்சி தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பணமோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட சஞ்சய் ராவத், மும்பையின் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அதிகாரி அறையில் ராவத்தை சந்திக்க அனுமதி கேட்டு, உத்தவ் தாக்கரே சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அனுமதி மறுத்த சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ராவத்தை சந்திக்க நீதிமன்றத்தில் … Read more

ஒரே நாளில் நாகார்ஜுனா, அமலா படங்கள் ரிலீஸ்

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான ஜோடியாக ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நாகார்ஜுனா, அமலா. ஒன்றாக சேர்ந்து நடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள். நாகார்ஜுனா இன்னமும் பிஸியான ஹீரோவாக நடித்து வருகிறார். அமலா திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். 30 வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழில் நடித்துள்ள 'கணம்' படம் தமிழிலும் தெலுங்கிலும் நாளை மறுநாள் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. அதே தினத்தில் ஹிந்தியில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' … Read more

நான் அதிகமாக பேசப்போகிறேன்.. நீங்க போய் உட்கார்ந்துக்கங்க கமல்.. ரஜினியின் கரிசனம்.. மறுத்த கமல்!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ட்ரெயிலர் அந்தந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் இந்த ட்ரெயிலரை வெளியிட்டனர். இயக்குநர் மணிரத்னம் மணிரத்னம் தன்னுடைய கதைகளில் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் இருக்குமாறு எப்போதுமே பார்த்துக் கொள்வார். இவரிடம் இருந்து … Read more