மஹா.,வில் இளைஞர் சுட்டுக் கொலை| Dinamalar

மும்பை, :மஹாராஷ்டிராவில், லால்ஜிபடா என்ற இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கு பேர் மீது, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில், ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்; காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர் அங்கிட் யாதவ், ௨௬. இவருக்கும், சோனு பாஸ்வான் என்பவருக்கும் இடையே, கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. ‘இதையடுத்து, சோனு பஸ்வான் அங்கிட் யாதவை கொன்றிருக்க வேண்டும்’ என, போலீசார் தெரிவித்தனர். சோனு பாஸ்வான் மற்றும் அவருடன் வந்தவர் மீது கொலை வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.