செவிவியர் தற்கொலை போலீசார் விசாரணை| Dinamalar

காரைக்காலில் செவிலியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி புனிதவள்ளி, 44; அரசு மருத்துவமனை செவிலியர். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோட்டுச்சேரி சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த 8ம் தேதி பணியில் இருந்தபோது அங்கு பணிபுரியும் அட்டென்டர் ராஜேஷ் என்பவர் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்றார்.

இது குறித்து அவரிடம் புனிதவள்ளி, கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புனிதவள்ளி தனது வீட்டில் படுக்கை அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.